Thursday, May 30, 2013

பயத்தை விரட்டும் பயணத்தை துவக்குவோம்

பயத்தை விரட்டும் பயணத்தை துவக்குவோம்:
(படித்ததில் பிடித்தது . . .)

வேலை கேட்டு விண்ணப்பம் போடுவதானாலும் சரி, தொழில் தொடங்க முயற்சிப்பதானாலும் சரி, நகரத்தில் படித்தவர்களுக்கும், கிராமத்தில் படித்தவர்களுக்கும், அடிப்படை முயற்சியிலேயே ஆயிரம் வித்தியாசங்கள். ஏன்? பயமும் தயக்கமுமே பிரதான காரணங்கள்.
நிறுவனத்திற்கு வேலை தேடி வருபவர்களிடம் மிக சாதாரணமான கேள்வியைக் கேட்டால்கூட பதில் சொல்ல தயங்குகிறார்கள். மிகவும் பயப்படுகிறார்கள்.
எந்த நிறுவனத்திற்கு வேலைக்கு விண்ணப்பித்தாலும் இந்த வேலை நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை வேண்டும். பின் அவ்வாறு கிடைக்கின்ற வேலையை வெற்றியுடன் பணியாற்றி அடுத்தவர்களின் பாராட்டை பெற வேண்டும். இது அணுகு முறையிலும் அடிப்படைத் தயாரிப்புகளிலும் இருக்கிறது.
புதியவர்களைப் பார்க்கும்போது நமது அணுகுமுறையாலேயே நல்ல உறவை அவர்களிடம் வைத்துக் கொள்ள முடியும்.
கடந்த வாரம் வியாபார விஷயமாக வெளிநாடு செல்வதற்காக Airport-ல் நின்றிருந்தபோது நடிகர் ரியாஸ்கான் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு எதேச்சையாக கிடைத்தது. அவரோடு இருக்கும்போது பலரும் அவரையே பார்த்தார்கள். அவரிடம் உங்களை அனைவரும் பார்ப்பது உங்களுக்கு ஒருமாதிரியாக இருக்குமே என்று கேட்டேன். உடனே இது பழக்கமாகி விட்டது என்று கூறியதோடு என்னைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்து எனது Business Card-டையும் கேட்டுப் பெற்றுக் கொண்டார். பின் எனது மகனையும், அவருடைய மகனையும், அறிமுகம் செய்து கொள்கிறார். பின் எனது, “உழைப்பை ருசித்துப் பார்” புத்தகம் ஒன்றை பரிசாக அவருக்கு கொடுத்தபோது அருமையான பரிசு என்று மகிழ்கிறார். எனக்கும் மகிழ்ச்சி, அவருக்கும் மகிழ்ச்சி. எப்படி? அவரிடம் பேசுவதற்கு எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஒரு வேளை நான் பேசி அவர் சரியாக பேசாமல் இருந்திருந்தாலும் அதைப்பற்றி நான் கவலைப்படப் போவதில்லை. காரணம், அது அவருடைய விருப்பம். ஆனால் மிக அருமையாக அவர் பேசியது உண்மையாகவே பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது.
அதேபோல் விமானத்தில் பயணம் செய்யும்போது அருகிலேயே Poland நாட்டைச் சேர்ந்த ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்கு ஆங்கிலம் தெரியாது. அவருடைய தாய் மொழிதான் தெரியும். இருப்பினும் கை சாடையிலும் அவருக்குத் தெரிந்த சில ஆங்கில வார்த்தைகளை வைத்து பல மணி நேரம் மகிழ்ச்சியாக பேசி வந்தோம். பின் அவருக்கு தமிழில் ‘நன்றி’ என்றும் ‘வணக்கம்’ என்று சொல்லக்கூடிய அளவுக்கு தமிழையும் கற்றுக் கொடுத்தேன். அளவற்ற மகிழ்ச்சியடைந்தார். பின் Airport-ல் என்னோடு வந்திருந்த மற்ற நண்பர்களுக்கும் அவர் தமிழில் நன்றி சொன்னார். மேலும் அவருடைய மொழியில் ‘நன்றி’ என்பதற்கும் வணக்கம் என்பதற்கும், 1 முதல் 10 வரைக்கும் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அதிலும் மகிழ்ச்சி.
எப்படி மொழி தெரியாதவருடன் உரையாடவும், உறவாடவும் முடிந்தது. அதோடு 10 மணி நேர விமான பயணம் மிக மகிழ்ச்சியாக சென்றது.
மேலும் மேற்கத்திய நாட்டினர் என்றாலே ஆங்கிலம் தெரியும் என்று பெரும்பாலோர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். பெரும்பாலான வர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனால் வியாபாரம் செய்கிறார்கள். அதேபோல் தேவையான அளவுக்கு ஆங்கிலத்தை தெரிந்து கொண்டாலே போதும்.
எப்படி ஒரு சாதாரணமானவன் சாதிக்க முடியும்? கற்றுக்கொள்ள வேண்டும். கால அவகாசம் எடுக்கும். பொறுத்திருந்து பார்க்க வேண்டும். கடந்த வாரம் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது நீண்ட நேரம் ஆங்கிலத்தில் என்னால் பேச முடிந்தது. எப்படி சாத்தியம். ஆங்கிலத்தில் பேசுவது அப்படி கடினமா என்று இன்றைய இளைஞர்கள் நினைக்கலாம். என்னைப் போன்றவர்களுக்கு நிச்சயம் கடினம்தான். ஏன் என்றால் SSLC- வரை ஆங்கிலமே தெரியாது. எப்படி ஆங்கிலத்தில் பேசுவது? பேச வேண்டும் என்ற எண்ணம், ஆசை, தினமும் காலையில் 1 மணி நேரம் Tuition பேச முடிந்தது. பல நாடுகளுக்கு எந்த துணையும் இன்றி செல்ல முடிகிறது. எப்படி? முயற்சி.
அறிவும் அனுபவமும் சேரும்போது வெற்றியாகிறது. ஓர் இடத்தை அடைவதற்கு பயணம் எப்படி முக்கியமோ அதுபோல் ஓர் இலக்கை அடைவதற்கும் பயணம் முக்கியம். ஏற்றுமதி தொழிலை வளர்ப்பதற்கு Frank Furt (Germany) பயணம் எங்களுக்கு எப்படி முக்கியமோ, அதுபோல் இன்றைய இளைஞர்கள் இலக்கை அடைவதற்கு அவர்களிடம் உள்ள பயத்தை விரட்டும் பயணம் முக்கியம்.
“விரைவில் துவங்குங்கள் பயணத்தை
விரட்டி அடியுங்கள் பயத்தை”

Wednesday, May 22, 2013

சிந்தையை சீராக்கும் தவம்!


தவம் என்பது மனதை ஒருங்கிணைக்கும் ஒரு பயிற்சி அல்லது மனதை ஒருங்கிணைப்பதற்காக செய்யும் பயிற்சி என்றே பலரும் நினைக்கின்றனர். ஆனால் அது ஓரளவு மட்டுமே உண்மை. தவம் என்பது செயலை குறிப்பதுவன்று. அது ஒரு நிலை. மனதை ஒருங்கிணைப்பத்தின் விளைவாக ஏற்படும் நிலையே தவம். தவம் என்பது செயல்  இல்லை. என்னும்பொழுதே அதை முயற்சி செய்ய தேவை இல்லை. மாறாக  தவம் என்னும் நிலையை அடையக்கூடிய ஒரு சூழலை ஏற்படுத்தும் பொழுது தவம் என்னும் நிலை அடைவோம்.
தவம் என்னும் நிலையில் என்ன நடக்கிறது
பொதுவாக நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் செயல்படும் பொழுது நம் மூளை 15 to 40Hz அதிர்வெண் கொண்ட பீட்டா அலையில் இயங்கும். நாம் தவம் செய்ய உட்கார்ந்தவுடன் சிறிது சிறிதாக நம் மூளையின் அதிர்வெண் குறைந்து ஆல்பா அதிர்வெண்ணை (9 to 14) அடையும். இந்த அதிர்வெண்ணில் நம் மனம் ஆழ்ந்த அமைதி பெறும். உடல் இயக்கங்கள் சீரடையும், மூச்சின் வேகம் குறையும், இதயத்தின் துடிப்பும் குறைவடையும் . அதனால் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இரத்த அழுத்தம் சீரடைகிறது. வளர்சதை மாற்றம் குறைவடைகிறது. இதனால் நம் ஆயுள் கூடுகிறது. தவம் செய்வதால் நம் உடலுக்கு பல நன்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வாக இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். இப்படியே நம் மூளையின் அதிர்வெண் தீட்டா (5 to 8Hz) அதிர்வெண்ணை அடையும்.
தவத்தால் ஏற்படும் மனநிலை மாற்றங்கள்
தவ நிலையில் நம் மனம் ஆழ் நிலைக்கு செல்லும். பொதுவாக  நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நம் மனம்  வெளி மனம் (conscious mind), உள்மனம்  (subconscious mind) என இரண்டு நிலைகளில் இயங்கும். நாம் நம் மூளையில் ஏற்படும் எண்ணங்களின் விளைவாக செய்யும் செயல் வெளி மனம் எனப்படும். அதேபோல் நாம் செய்யும் எண்ணம் இல்லாமல் செயல்படும் சில நம் உடலின் வேலைகள் உள் மனதின் உதவியோடு நடைபெறும். உதாரணமாக நம்முடைய இதயத் துடிப்பு, நம்முடைய மூச்சு, இப்படி சில செயல்கள் நம் விருப்பங்கள் எண்ணங்கள் இல்லாமல் தானாக நடுக்கும் அவை செய்வது உள் மனம். தவ நிலையில் இந்த இரண்டு மனநிலையை தாண்டி நாம்  ஆள் மனதிற்கு(Transcendental mind) செல்ல முடியும். தவ நிலையில் நம் மனம் ஆழ் நிலைக்கு செல்லும். இதனால் நம் மனம் அமைதி அடைவதுடன் நாளடைவில் தெளிவான சிந்தனை , ஆழ்ந்த சிந்தனை, தெளிவான சிந்தனை  மற்றும் ஆக்கபூர்வ சிந்தனை மேலோங்கும். தீர்மானிக்கும் திறன் கூடும். மனம் தீட்டா அதிர்வெண்ணில் இருக்கும் பொழுது மனம் பல அறிதற்கரிய விடயங்களை அறியும். இந்த மன நிலையில் தான் புதிய கண்டுபிடிப்புகளும், ஒப்பற்ற கலை படைப்புகளும் உருவாகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
பூமியின் இதயத்துடிப்பு (schumann resonance)
நமக்கு எப்படி இதயத்துடிப்பு இருக்கிறதோ அதேபோன்றே நம் பூமிக்கும் இதயத் துடிப்பு இருக்கிறது. அது நம் மூளையின் அதிர்வெண்ணை போலவே 8 முதல் 40Hz அதிர்வெண்ணில் இயங்குகிறது.  பொதுவாக அது 7.5 to 11Hz அதிர்வெண்ணில் இயங்குகிறது. இது பூமியின் மின்காந்த அலையின் அதிர்வெண்ணாகும். நம் மூளையின் அதிர்வெண் இந்த பூமியின் அதிர்வெண்ணை அடையும் பொழுது அல்லது அதற்கு நெருங்கி வரும் பொழுது நம் மனம் அதிகம் அமைதி பெரும். ஒட்டு மொத உலக மக்களும் தவம் செய்யும் பொழுது உலகமே அமைதி பெரும். இதனாலேயே தவத்தின்  மூலம் மட்டுமே உலக அமைதி பெரும் என்று கூறுகின்றனர்.
தவம் செய்வது எப்படி?
பல்வேறு முறைகளில் தவம் செய்யலாம். இப்படித்தான் ஒரு தவம் செய்யவேண்டும் என்பதில்லை. இதன் அடிபடையில் மந்திர பிரயோகம், சூனிய தவம், குண்டலினி தவம், கிரியா யோகம், விபாசனா  முறை, ராஜ யோகம், ஆழ் மன தியானம், என  எண்ணற்ற வகைகள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒரு வகை தவம் நன்கு அமையும். அல்லது பல்வேறு தவ முறைகளை செய்து எது நன்கு அமைகிறதோ அதையே எடுத்துக்கொண்டு நாம் அதை தொடர்ந்து முயற்சிக்கலாம். தியானத்தில் நாம் எவ்வளவு நேரம் செய்கிறோம் என்பது முக்கியமில்லை. எவ்வளவு நாள் தொடர்ந்து தவறாமல் செய்கிறோம் என்பதே முக்கியம்.
தவம் செய்யும் ஆரம்பிக்கும் பலர் தங்கள் பயிற்சியை ஆரம்பிக்கும் பொழுது தங்களுக்கு பல எண்ணங்கள் வந்து இடர்ப்பாடுகள் செய்வதையே சிரமமாக நினைப்பார்.
அந்த எண்ணங்களில் இருந்து விடுபட கடுமையாக  முயற்சி செய்வார். அவர்கள் கடுமையாக முயற்சி செய்ய செய்ய மீண்டும் மீண்டும் வரும் எண்ணங்களால் தோற்கடிக்கப்படுவர். எப்பொழுது எண்ணங்களை கட்டுப்படுத்த முயற்சி செய்கிறோமோ அப்பொழுதே தவம் செய்வதை விட்டு விலகி செல்கிறோம். தவம் செய்வதில் முயற்சி இருக்ககூடாது. தவ பயிற்சியை எளிதாக்க தவம் செய்ய அமர்ந்தவுடன்  இந்த மூன்று எளிமையான வழிமுறைகளை கையாளலாம்.
1. எண்ணங்களை எதிர்க்கக்கூடாது
2. எண்ணங்களின்  பின் செல்லக்கூடாது
3. புதிதாக எண்ணங்களை உருவாக்ககூடாது.
இந்த வழிமுறைகள் எல்லாவகை தவ முறைகளுக்கும் பொருந்தும்.
தவத்தின் பயன் எண்ணிலடங்காதது. பல பயன்கள் தத்துவரீதியாக இருப்பதால் நாம் அதை மூட நம்பிக்கையாக எடுத்துக்கொள்ளக்கூடாது. நம் வாழ்வு மேன்மை  பெற தவம் ஒரு நல்ல வழி.
இப்போது ஆன்மிகம் என்பது அரசியலிலும் பேராசைகளிலும் சிக்கிக் கொண்டுள்ளது. அதுபோன்ற ஆன்மிக வாதிகளிடம் பணத்தையும் நேரத்தையும் வீணாக்காமல் நாம்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.

மனம்


கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்



ஒரு மனிதனுக்கு கடவுளை காண வேண்டும் என்று ஆசை. அவரை எப்படி சந்திப்பது ?

நிறைய பேரை கேட்டான் " கோவிலுக்கு போ !" என்றார்கள் .

உடனே புறப்பட்டான் .

போகும் வழியில் ஒரு ஞானியை சந்தித்தான்
http://www.boompowerofrhythm.org/wp-content/uploads/2013/02/art-of-meditation-1821.jpg

அவர் கேட்டார் .

" எங்கே போகிறாய் ?"

" கடவுளை காண போகிறேன் !"

" எங்கே ? "

" கோவிலில் !"

" அங்கே போய் ........"

" அவரை வழிபட போகிறேன் ! "

" அவரை உனக்கு ஏற்கனவே தெரியுமா ?"

" தெரியாது "

" எந்த வகையிலும் நீ கடவுளை அறிந்திருக்கவில்லை . அப்படி இருக்கும் போது எப்படி நீ அவரை வழிபட முடியும்?"

" அப்படியென்றால் "

 " உன்னுடைய வழிபாடு வெறும் சடங்காக தான் இருக்க முடியும் "

அவன் ரொம்பவே குழம்பி போய்ட்டான்

ஞானி தெளிவு படுத்தினார்

" ஏ, மனிதனே ..... நீ செய்யபோவது உண்மையான வழிபாடு அல்ல .... இன்றைக்கு மனிதர்கள் " வழிபாடு " என்ற பெயரில் ஆண்டவனிடம் தங்கள் ஆசைகளை தெரிவித்து கொண்டிருக்கிறார்கள் . தங்களது கோரிக்கைகளை குரல் மூலம் பட்டியலிட்டு சொல்லி கொண்டிருக்கிறார்கள் .தங்களது புகார்களை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார்கள் அவ்வளவுதான் "

" நான் கடவுளிடம் அன்பு செலுத்த விரும்புகிறேன் ..."

" நீ அறியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும் ?"

" அப்படியானால் ..  ஆண்டவனை நான் சந்திக்க என்னதான் வழி ?"

" அவரை நீ சந்திக்க முடியாது . உணர முடியும் !"

" அதற்க்கு வழி ?"

" தியானம்"

" தியானத்திற்கும் , கடவுளுக்கும் சம்பந்தம் உண்டா ?"

" இல்லை "
மனிதன் வியப்போடு நிமிர்ந்தான் . அவர் சொன்னார் :

" தியானம் உன் மனதோடு சம்பந்தப்பட்டது . அது உனக்குள் ஓர் ஆழ்ந்த மௌனத்தை உண்டு பண்ணும் , அப்படிப்பட்ட ஒரு மௌன நிலையில் கடவுள் இருப்பதை நீ உணர தொடங்குவாய்  . உண்மையான தியானத்தின் பின்விளைவே வழிபடுதல் ஆகும் . தியானம் செய்பவன் மட்டுமே கடவுளை உணர முடியும் "

அந்த மனிதனும் ஞானியும் பேசிக்கொண்டு இருக்கும் போதே , வெளிநாட்டுக்காரர் ஒருபார் அங்கெ வந்தார் . ஞானியின் முன்னால் வந்து பணிவோடு நின்றார் .

 தன்னுடைய தேவையை சொன்னார் :

" I WANT PEACE"

ஞானி சொன்னார்:

" முதல் இரண்டு வார்த்தைகளை விட்டு விலகு , மூன்றாவது வார்த்தையை நீ நெருங்கலாம் !"   எனக் கூற , வந்தவர் யோசித்தார் .

 ' I ' . ' WANT ' இரண்டையும் விட்டு விலகினால் 'PEACE ' நெருங்கி வருகிறது !

' நான் ' என்ற அகங்காரத்தை விலக்குங்கள் . ' என்னுடையது ' என்கிற ஆசைகளை விலக்குங்கள். ' அமைதி ' என்கிற இறைநிலையை நீங்கள் நெருங்கிவிடுவீர்கள் .

வெளிநாட்டுகாரருக்கு விளக்கம் கிடைத்தது .மனநிறைவோடு திரும்பி சென்றார் . கொஞ்ச நேரத்தில் இன்னொரு மனிதன் அங்கெ வந்தான் .

" சுவாமி ! இப்பத்தான் கோவில்லே சாமி கும்பிட்டு வர்றேன் . அருமையான தரிசனம் ! அந்த அளவுக்கு வேறே யாருக்கும்  கிடைச்சிருக்காது !"

" எப்படி அது ?"

" ஸ்பெஷல் தரிசனம் ! 50 ரூபாய் டிக்கெட் ! சுவாமிக்கு நெருக்கமாக போய் சன்னதியிலே கொஞ்ச நேரம் உக்கார முடிஞ்சது !"

அவன் முகத்துல கடவுளை நெருங்கி விட்ட பெருமிதம் !

ஞானி கேட்டார்

" அப்படின்னா உனக்கும் கடவுளுக்கும் எவ்வளவு தூரம் ?"

" ஒரு பத்தடி தூரம் இருக்கும் . அவ்வளவுதான் !"

உற்சாகமாக சொன்னான் .

" உன் அளவுக்கு வேறு யாரும் நெருங்கவில்லையா ?"

"இல்லை "

" அந்த வகையில்  பார்த்தால் உன்னைவிட கடவுளுக்கு நெருக்கமானவரும் வேறொருவர் உண்டு !"

" யார் அவர் "

" அங்கே இருக்கிற அர்ச்சகர் !"

வந்தவன் முகத்தில் ஒரு சிறு ஏமாற்றம் .

" சரி , சுவாமி . நான் வர்றேன் !"

சோர்வோடு நடந்து போனான் .

அதன்பிறகும் விவாதம் தொடர்ந்தது . இறுதியில் மனிதன் எழுந்தான் . ஞானியிடம் விடை பெற்றான் . திரும்பி நடந்தான் .

 ஞானி  கேட்டார் :

" எங்கே போகிறாய் ? "

" வீடுக்கு !"

" கோவிலுக்கு போகவில்லையா ?"

" இல்லை "

" அங்கே போக வேண்டும் என்றுதானே புறப்பட்டு வந்தாய் ?"

" ஆண்டவனை உணர்ந்த பிறகுதான் அவரை வழிபட முடியும் என்பதைப் புரிந்துக் கொண்டேன் .

'நான் ' . 'என்னிடம் ' இருந்து விலகினால் தான் இறைவனை நெருங்கலாம் என்கிற உண்மையை தெரிந்து கொண்டேன் "

ஞானி இருகைகளையும் உயர்த்தினார் .

" ஆன்மிகம் என்பது நெருங்குவது அல்ல , விலகுவது ! எவ்வளவு தூரம் விலகியிருக்கிறீர்ககிறீர்களோ , அவ்வளவு தூரம் நெருங்கியிருக்கிறீர்கள் என்பது பொருள் "

http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSTrMrLQ9Gf5hQWcZWSiV-SKIxkYS6lYBb6V2YAkpHY_qKpXnHH

மூளையும் அதன் அதிர்வுகளும்


[Enter Post Title Here]


மூளையும் அதன் அதிர்வுகளும்

மூளையும் அதன் அதிர்வுகளும்
மருத்துவ அடிப்படையில் மூளை அதிர்வுகளை அளந்து ஆய்வு செய்வதற்குஎலக்ட்ரோ என்ஸபலோ கிராபி – Electro –Encephalo- graphy” என்பார்கள். பொதுவாக மூளையின் அதிர்வுகள் வினாடிக்கு 1 முதல் 40 அலைகள் இருக்கும் அதை மருத்துவத்திலும், மறை பொருளிலும் எப்படி பகுத்து ஆயலாம் என பார்ப்போம்.

மருத்துவத்தில்
1.            ”டெல்டா – Delta” 1 முதல் 4 அலைகள்.
2.            “தீட்டா - Theta” 5 முதல் 7 அலைகள்.
3.            “அல்பா – Alpha” 8 முதல் 12 அலைகள்
4.            “பீட்டா 1 – Beta 1 ” 13 முதல் 20 அலைகள்.
5.            “பீட்டா 2 – Beta 2” 21 முதல் 40 அலைகள்.
6.            “க்காமா – Gamma” 41 அலைகளுக்கு மேல்.



waves
மறை பொருளில்
1              ”டெல்டா – Delta” 0 அலை இறைநிலை-அமைதி-சமாதி.
2              ”டெல்டா – Delta” 1 முதல் 4 அலைகள்ஞானம்மிக ஆழ்நிலை தியானம்
3              “தீட்டா - Theta” 5 முதல் 7 அலைகள்.- சித்து (சித்தர்கள்) – ஆழ்நிலை தியானம்.
4              “அல்பா – Alpha” 8 முதல் 12 அலைகள்அல்பா தியானம்- நமது சுற்று புறத்தின் கூர்ந்த அறிவு. மாணவர்களுக்கு மிக நல்ல தியானம்
5              “பீட்டா 1 – Beta 1 ” 13 முதல் 20 அலைகள். நாம் சாதராணமாக விழித்து இருக்கும் நிலை.
6              “பீட்டா 2 – Beta 2” 21 முதல் 40 அலைகள். நாம் பதட்டபடும் நிலை.
7              “க்காமா – Gamma” 41 அலைகளுக்கு மேல். ஆய்வுக்கு அப்பாற்பட்ட நிலை