Thursday, December 20, 2012


முடியும் என்று நம்புங்கள்


ஆழ் மனதில் நுணுக்கமான, அறிவு பூர்வமான, ஆக்கப்பூர்வமான விஷயங்களை நாம் பதிய வைப்பதில்லை. நல்லதையே நினைத்திருந்தால் நல்லதே நடக்கும். நம்பிக்கைதான் ஆணிவேர். தீய எண்ணங்களால் ஆழ்மனதை நிரப்பினால் தீயவை தான் பிரதிபலனாகக் கிடைக்கும். நீங்கள் என்ன விதைகின்றீர்களோ, அதைத்தான் அறுவடை செய்கிறீர்கள். ஆக, கம்ப்யூட்டர் மாதிரி ஆழ்மனதில் பதியும் விஷயங்களுக்கேற்ப அதன் பலா, பலன்கள் அமைந்திருக்கும்.
யாராவது, ஏதாவது சொன்னால் ‘முடியாது’ என்றபதில் தான் வரும். இது மனிதர்களின் இயல்பு. “உன்னால் முடியும் தம்பி” என்று நம்புகிறவர்கள் எத்தனை பேர். ‘பிடிக்காது, வராது, முடியாது’ என்று ஏன் எதிர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்கிறீர்கள்.
எடுத்த எடுப்பிலேயே, முயற்சி ஏதும் செய்யாமலே, இது நம்மால் முடியாது என்று சொல்வீர்களானால், ஆழ்மனதில் அதன் தாக்கம் உரம்பெற்று, தீயபலனையே தரும். இது சிந்திக்கும் திறனைப் பாதிக்கிறது. முன்னேற்றத்தைத் தடுக்கிறது. முயற்சி மேற்கொள்ள இடம் தராமல் ‘ஸ்டிரைக்” செய்கிறது.
முயற்சி செய்து பார்ப்போம் என்று பிரயத்தனம் மேற்கொள்ளும் போது ஒரு முனைப்பு ஏற்படுகிறது. முயற்சி தம் மெய்வருத்தக் கூலி தருமன்றோ. முயற்சி பலன் தரும் என்றநம்பிக்கை லேசாக நம் மனதில் துளிர்விட ஆரம்பிக்கிறது. கடைசிவரை முயன்று பார்ப்போம் என்றஉறுதி ஏற்படுகிறது. பலன் கிட்டாவிட்டாலும் முயற்சியாவது செய்தோமே என்றமனநிறைவு ஏற்படுகிறது. முயற்சி திருவினையாகும்போது நல்ல பலனும் கிடைக்கிறது.
எண்ணிய எண்ணியாங் எய்துவர்
எண்ணியர் திண்ணியராகப் பெறின்
என்பது வள்ளுவர் வாக்கு. அந்த எண்ணம் வலிமையுடையதாக இருந்தால் அதனால் நிச்சயம் பலன் கிட்டுகிறது. எண்ணும் போதே எதிர்மறையான எண்ணங்களை எண்ணாமல் ஆக்கபூர்வமானதாக பயனுள்ளதாக, வெற்றிதரும் எண்ணங்களைத்தான் எண்ண வேண்டும்.
வருகின்ற வாய்ப்பினை தன் இறுகத் தாளிட்டுத் தடுத்து விடுகிறீர்கள். எதையும் செய்யும் துணிவை அது நசுக்கி விடுகிறது. மேலும் வெற்றி வாய்ப்பினைப் பறித்துவிடுகிறது.
மூளையின் சிந்தனைத் திறன் ஆளுமை ஆற்றல், எதையும் சாளிப்போம் என்றதைரியம், ஊக்கம், கனவுகள் மெய்ப்பட வேண்டும் என்றஎண்ணம் எல்லாம் விரலுக்கு இறைத்த நீராய்ப் பயனற்றுப் போகின்றன.
செயல் திறன் கதவுகளை மூடாமல் நன்கு திறந்து வையுங்கள். உங்களுக்குச் சங்கடத்தைத் தரும், ஏமாற்றத்தைத் தரும் நம்பிக்கையைச் சிதைக்கும் எண்ணங்களைக் குப்பை எனத் தூரத் தள்ளுங்கள். வீட்டைக் கூட்டி குப்பையை வெளியே கொட்டினால் வீடு சுத்தமாவது போல, மனம் சுத்தமாகும், தெளிவாகும். சலனமின்றி இருக்கும். அமைதியான அந்த ஆழ்மனதில் நல்ல கனவுகளை நிரப்புங்கள். இன்பகரமான நினைவுகளை அசைபோடுங்கள். உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட பயனுள்ள நல்ல விஷயங் களைத் திரும்பத் திரும்ப எண்ணிப் பாருங்கள். அந்த எண்ணம் வலுப்பெற்று ஊக்கமடைந்து, உயிர்ப்புடன் மலர்ச்சி அடையும்போது என்னால் முடியும் என்றஉறுதியான நம்பிக்கை வெளிப்படுவதைக் காணலாம்.
மெழுகுவர்த்தி லேசாக எரிந்து, இருளை அகற்றி, எங்கும் ஒளி வீசுவதுபோல உங்கள் உள்ளத்தில் ஒளி தோன்றுகிறது. வழி பிறக்கிறது, உற்சாகம் பெருகுகிறது. கம்ப்யூட்டர் பட்டனைச் சரியாகத் தட்டினால் நீங்கள் எதைப் பெற விரும்புகிறீர்களோ அது கம்ப்யூட்டர் திரையில் தெரிய ஆரம்பிப்பது போல, மனத்திரையில் செயல்திறன் உருவாகிறது.
உங்களுடைய தோல்வி மனப்பான்மை, மனச் சோர்வு, இயலாமை பற்றிய பயம் எல்லாம் விலகுகிறது. உங்கள் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் துவங்குகிறீர்கள்.
ஆகவே, இனி “முடியாது” (Impossible) என்று ஒருபோதும் சொல்லாதீர்கள். அச்சொல்லை உங்கள் மன அகராதியிலிருந்து அப்புறப்படுத்தி விடுங்கள். முடியாது என்பது முன்னேற்றத்திற்கான தடைக்கல்லாகும்.
முடியாது என்று ஒன்றுமே இல்லை என்று திரும்பத் திரும்ப நினைவு கூறுங்கள். பிரச் சனையை எப்படியும் சமாளித்தேயாக வேண்டும். நாம் கடுமையான முடிவுகளை மேற்கொள்ளத் தான் வேண்டும். லட்சியத்தை அடையும் வரை மனம் தளரக் கூடாது என்று உறுதியான சங்கல்பத்தை மேற்கொள்ளுங்கள்.
சரியான முடிவை மேற்கொள்ளும் ஆற்றல் என்னிடம் இருக்கிறது. சாத்தியக் கூறுகளைத் தெளிவாக ஆராய்ந்து முடிவு மேற்கொள்வதே எனது லட்சியம். அந்த லட்சியத்தை எப்படியும் அடைந்தே தீருவேன் என்று எண்ணுங்கள்.
நிச்சயம் என்னால் சிகரத்தை எட்ட முடியும். சாதனையாளர்களின் பட்டியலில் நானும் இடம் பெறுவேன். வெற்றி கிட்டும் வரை தொடர்ந்து முயற்சியை மேற்கொள்வேன் என்பதே ஆக்கபூர்வமான சிந்தனை.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த ஆக்கப்பூர்வமான சிந்தனையை வளர்த்துக் கொள்வதுதான். நம்பிக்கை தான் மன உறுதி. ஆழ்மனதில் இவற்றைஉறமிடுங்கள். பயிர் நன்றாக வளர்ந்து உயரிய மகசூலைத்தரும்.
வெற்றி பெற வாழ்த்துக்கள்.

தரணி ஆளும் தன்னம்பிக்கை






தன்னம்பிக்கை நிரம்பியவன் தரணி ஆள முடியும் !!!
தனம்பிக்கை தடைகல்லை உடைத்தெறியும் வெடிக்கல்லாகும்.
தன்னம்பிக்கையே ஒருவர் வாழ்வின் முதல் மூலதனம்.

தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் வாழ்வில் வெற்றி பெற முடியும்
தன்னம்பிக்கை உள்ளத்தில் வளர்த்துக் கொண்டு, பிறருடன் பேசும் பொழுது, பேசுபவரது கண்களை நேருக்கு சேர் சந்திக்க கற்றுக்கொள்ள வேண்டும். 
தன்னம்பிக்கை உணர்வை வளர்த்துக் கொள்வதே வெற்றியின் முகவரி....
!பாராட்டு என்பது மிகச் சக்தி வாய்ந்த ஊக்குவிப்பான்

செல்லுமிடமெல்லாம்...சிறப்புத்தான்..தேடித்தரும் தன்னம்பிக்கை !
தன்னம்பிக்கை உடையவர்களுக்கு...

வெற்றியின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்.

தன்னம்பிக்கை என்பது உயிர் மூச்சாகும். உயிரில்லாதவன் பிணத்திற்கு 
சமம் என்பதுபோல் தன்னம்பிக்கை இல்லாதவன் 
உயிரற்ற ஜடத்திற்கு இணையாக கருதப்படுவார்கள்.
நாம் எப்போதும் நம்மை ஒரு வெற்றியாளனாக அடையாளப் படுத்திக்கொள்வதோடு எந்த வொரு சந்தர்ப்பத்திலும் நம்பிக்கையை முக்கியமாக முதன்மைப்படுத்திக்கொள்வது நம்மை தன்னம்பிக்கையாளராக மாற்றும் வலிமை படைத்தது....
ஆர்வத்துடன் தினமும் பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டு அறிவையும், செயல் திறமையையும் வளர்த்துக்கொண்டு வருவது மிகவும் அவசியம் !
தங்களை நோக்கி எதிர் வரும் பிரச்சினைகளை சவால்களாக ஏற்றுக்கொண்டு அவைகளுடன் உடனே நேரடியாக மோதி அவைகளை வெற்றிக்கொள்ளும் சக்தியைத்த்ருவது தன்னம்பிக்கையே !!

 என்னால் முடியுமா என்று மலைக்காமல் , முடியவில்லை என்றால் இயல்பாக அதை ஒதுக்கி விடுவதே சாலச்ச்சிறந்தது...

மண்ணுக்குள் புதைத்தாலும் விண்ணை நோக்கி வளரும்
வேகத்துடன்  மண்ணைப் பிளந்து
வெளியேறும் விதைக்குள்  இருப்பது  தன்னம்பிக்கை.!!

!





Tuesday, December 18, 2012


வெற்றியின் ரகசியம்

வெற்றியின் ரகசியத்தை அறிந்து கொள்வதற்கு முன், உங்களின் உள் மனதை அறிந்து கொள்வது மிகவும் அவசியம். உங்களைப் பொறுத்தவரையில்,
“வாழ்க்கையில் வெற்றி என்பதற்கு என்ன அர்த்தம்?
யார் வெற்றி பெற்றதாக நீங்கள் கருதுகிறீர்கள்?
என்ற கேள்விகளுக்கு, தெளிவான பதில் இருக்க வேண்டும்.
நீங்கள் வெற்றி பெறுவதற்கு தேவை,
கல்வியா, பணமா, பதவியா, புகழா, அந்தஸ்தா,
மகிழ்ச்சியான உறவா அல்லது எல்லாம் கலந்த கலவையா?
எல்லாம் தேவையென்றால் எது எந்த அளவுக்கு முக்கியம்?
இதில் குழப்பம் என்றால் உங்களைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளுங்கள்.
“உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்…’
என்ற திரைப்படப் பாடலைக் கேட்டிருப்பீர்கள். வெற்றிப் பாதையில் நாம் கடக்க வேண்டிய முதற்படி, நம்மை நாமே புரிந்து கொள்வது. ஏனென்றால், நம்மைப் பற்றி, நம் மனதில் வரைந்து வைத்துள்ள சுயசித்திரம்தான், ஒரு நாள் நிஜமாக போகிறது.
மனித மனம், ஒரு நிலையில் இல்லாத குரங்கு போன்றது. அதை ஒரு நிலைப்படுத்தி, “நாம் எப்படிப்பட்ட மனிதர்? நம் வாழ்க்கையில் என்னவெல்லாம் சாதிக்க வேண்டும்?’ என்ற கேள்விகளுக்கு நம்மிடத்தில் தெளிவான பதில் இருக்க வேண்டும்.
நம்மைப் பற்றி புரிந்து கொள்வதற்கு அடிப்படைத் தேவை, நாம், நம்மை முழுமையாக நேசிக்க வேண்டும்;
முதலில் நமக்கு நாம் உண்மையாக இருக்க வேண்டும்.
அடிப்படை குணங்கள், விருப்பு, வெறுப்பு, எதிர்பார்ப்புகள், தேவைகள்
பற்றிய தெளிவு இருக்க வேண்டும். நம் வாழ்க்கை லட்சியம் என்ன,
அதை அடைய எதை இழக்கத் தயாராக இருக்கிறோம்
என்ற கேள்விகளுக்கு, நம்மிடத்தில் பதில் தயாராக இருக்க வேண்டும்.
மனதை ஒரு நிலைப்படுத்த, ஒரு அமைதியான இடத்தில் நம்மைத் தனிமைப்படுத்தி, கண்களை மூடி மெதுவாகவும், சீராகவும் நீண்ட மூச்சை எடுத்து, உடலையும், மனதையும் தளர்த்திக் கொள்ள வேண்டும்.
கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், இறைவனை வழிபடலாம் அல்லது தியானம் செய்யலாம். பின், கீழ்க்கண்ட கேள்விகளுக்கு நம் அடிமனதிலிருந்து வரும் உண்மையான பதிலை, மனதில் பதிவு செய்ய வேண்டும்.
* நான் அடிப்படையில் எப்படிப்பட்ட மனிதர்?
* எது நிரந்தர மகிழ்ச்சியையும், துக்கத்தையும் கொடுக்கும்?
* மிகவும் பிடித்தது மற்றும் பிடிக்காதது என்ன?
* வாழ்க்கையில் வெற்றியடைய என்னவெல்லாம் சாதிக்க வேண்டும்?
* என்னைப் பற்றி மற்றவர்கள் என்ன அபிப்ராயம் வைத்திருக்க வேண்டும்?
* என்னுடைய பலம் எது, பலவீனம் எது?
* என்னுடைய முன்மாதிரி மனிதர்கள் யார்; எதனால்?
* வருங்காலத்தில் யாரைப் போல் ஆக வேண்டுமென்று விரும்புகிறேன்?
மேற்கண்ட கேள்விகளுக்கு பதில்களை ஆராய்ந்து பார்த்து, முரண்பாடான விஷயங்களையும், நடைமுறைக்கு ஒத்து வராத யோசனைகளையும், தவிர்த்து விடவேண்டும்.
அதையே எழுதி வைத்தால், நம்மைப் பற்றியும், நாம் சாதிக்க நினைப்பதைப் பற்றியும், அதற்காக செய்ய வேண்டிய தியாகத்தைப் பற்றியும், தெளிவும், மன வலிமையும் கிடைக்கும். இப்படி எழுதி வைத்ததைப் பத்திரப்படுத்தி வைத்தால், வாழ்க்கையில் குழப்பம், சலிப்பு மற்றும் சோர்வு ஏற்படும் போது அதை எடுத்துப் படித்தால், நிச்சயமாக புத்துணர்வு கிடைக்கும்; மன உறுதியும், தெளிவும் பிறக்கும்.
வாழ்க்கையில் என்ன வேண்டுமென்பதில் தெளிவு இருந்தால் மட்டும் போதாது, என்ன தேவையில்லை என்பதிலும் தெளிவு வேண்டும். சிலருக்கு, வருடா வருடம் வாழ்க்கையின் லட்சியங்கள் மாறிக் கொண்டேயிருக்கும். இதற்கு முக்கியக் காரணம், இவர்களுக்கு எந்த லட்சியத்திலும் தீவிரமான பற்று இருப்பதில்லை. மேலும், வெற்றியடைந்த யாரைப் பார்த்தாலும், அவர்களைப் போல வர வேண்டும் என்று, திடீர் ஆர்வம் காட்டுவர்.
குறிக்கோளை நிர்ணயம் செய்யுமுன், நம்மை நம்பியுள்ள குடும்பத்தினரைக் கலந்து ஆலோசிப்பது அவசியம். அவர்களுடைய ஆதரவு இல்லாதபோது, நம்முடைய லட்சியப் பாதையில் சறுக்கல் வரலாம். தேவைப்பட்டால் நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்களிடத்தில் கருத்து கேட்கலாம்.
ஒவ்வொரு நிகழ்வும், இந்த உலகத்தில் இருமுறை நிகழ்வதாகக் கூறுகின்றனர். ஒன்று மனத்திரையில்; இன்னொன்று நிஜத்தில். அதனால், ஒவ்வொரு நாளும் நம் அன்றாட வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன், நாம் என்னவாக வேண்டும் என்பதை மனத்திரையில், பதிவு செய்ய வேண்டும்.
நாம் எந்த நிலையை அடைய வேண்டுமென்று, மனதில் ஆழமாகப் பதிவு செய்கிறோமோ, அந்த நிலையை விரைவில் அடைவது உறுதி.
Hiiiii and Hello welcome all to our Blog